கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்து பலி

by Editor / 16-08-2021 09:28:57am
கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்து பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பாண்டியன். இவர் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் விரியூரில் உள்ள ஒரு தனி நபருடைய கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கயிறு மூலம் மேலிருந்து கீழ் கிணற்றில் இறங்கும்போது கயிறு அறுந்து சுமார் 40 அடி ஆழத்தில் பாண்டியன் விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து இவரது உறவினர் ஆறுமுகம் சங்கராபுரம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via