தாராபுரம் காவல் நிலைய  காவலர்தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 03-02-2024 09:33:26pm
தாராபுரம் காவல் நிலைய  காவலர்தூக்கிட்டு தற்கொலை.

திண்டுக்கல் மாவட்டம் இடையப்பட்டியை சேர்ந்தவர் உலகநாதன் .இவரது மகன் தமிழரசன் ( 27 ) இவர் 2017-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர் கோவை பயிற்சியில் இருந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு  தாராபுரம் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் பெற்று  பணியாற்றிவந்தவர் தாராபுரம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்தார். 

காலையில் பணிக்கு வந்துவிட்டு பகல் ஒரு மணிக்கு வீட்டுக்கு சென்றதாக்க கூறப்படுகிறது.பின்னர் பணிக்கு வரவில்லை அருகில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி  இறந்து கிடந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தூக்கு போட்டு கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து தாராபுரம் காவல் நிலைய (பொறுப்பு) அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 

 

Tags : தாராபுரம் காவல் நிலைய  காவலர்தூக்கிட்டு தற்கொலை.

Share via