பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி

by Staff / 06-02-2024 02:31:53pm
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (பிப்.06) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர வெடி விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பட்டாசு வெடி விபத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்தின்போது மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக ஓடும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

 

Tags :

Share via