காவிரிப் பிரச்சனையில் மாநிலங்களின் பங்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்

by Admin / 03-08-2021 03:40:20pm
காவிரிப் பிரச்சனையில் மாநிலங்களின் பங்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்


   
புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரி 75வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

 தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் மாணவ மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் பேசினர்.

பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பேசுகையில் கூறியதாவது,

புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாகவும், மாணவ மாணவிகள் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஆன்லைன் கல்வியை கற்க முடியவில்லை, ஆசிரியர்கள் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும், 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கிறார்கள்.

ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேகதாது பிரச்சனை பற்றி நான் ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அவர்களுக்கு உரிய பங்கை காவிரி நீரை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், திருக்கடையூர் கோயில் நிர்வாகிகள், பா.ஜனதா கட்சி வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் அகோரம், நாஞ்சில் பாலு, நகர செயலாளர் மோடி கண்ணன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via