காதல் தோல்வி: வட மாநில வாலிபர் தற்கொலை

by Staff / 12-02-2024 03:32:25pm
காதல் தோல்வி: வட மாநில வாலிபர் தற்கொலை

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  ராம்நாத் மகன் சத்தியம் யாதவ் (20), இவர் உடன்குடி அருகே கல்லாமொழி அனல் மின் நிலையத்தில் கான்ட்ராக்ட் லேபர் ஆக வேலை பார்க்கிறார். குலசேகரன்பட்டனம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.ஆனால் அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதனால் மனம் அடைந்த சத்தியம் யாதவ், தங்கி இருந்த ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகு ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via