நாளை ரயில் மறியல் - விவசாயிகள் அறிவிப்பு

by Staff / 14-02-2024 04:44:22pm
நாளை ரயில் மறியல் - விவசாயிகள் அறிவிப்பு

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில் நாளை விவசாயிகள் ரயில் மறியல் நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து, மீண்டும் போராட்டம் நடத்த 1 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்ததால் தலைநகர் டெல்லி குலுங்கியது. தடைகளை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது டிரோன் மூலம் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் டெல்லி எல்லை பகுதிகள் போர்க்களமாக மாறின.

 

Tags :

Share via