இந்திய எல்லையோரங்களில் சீன மக்கள் குடியேற்றம்

by Staff / 15-02-2024 01:36:42pm
இந்திய எல்லையோரங்களில் சீன மக்கள் குடியேற்றம்

இந்திய எல்லையோரங்களில் உருவாக்கப்பட்ட புதிய கிராமங்களில் சீன அரசு மக்களை குடியேற்றி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ''ஷியகாங்" பகுதியில் கட்டப்பட்டு வந்த கிராமத்தில் சீன நாட்டினர் குடியேறி வருவதாக வடமாநில ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் பள்ளத்தாக்கு மற்றும் தவாங் செக்டருக்கு குறுக்கே 'ஷியகாங்' கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. எல்லைக் கட்டுபாட்டு கோடு அருகே மேலும் பல புதிய கிராமங்களை சீன அரசு உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via