கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

by Editor / 19-02-2024 11:37:19pm
கேரளாவில்  6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கேரளாவில் வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் இயல்பை விட சுமார் 4 டிகிரி அதிகமாக வெப்பம் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

 

Tags : 6 மாவட்டங்களுக்கு மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Share via