பானை சின்னம் ஒதுக்கக்கோரி விசிக மனு

by Staff / 20-02-2024 12:47:21pm
பானை சின்னம் ஒதுக்கக்கோரி விசிக மனு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க அக்கட்சியின் தலைவர் தொல்.‌திருமாவளவன் டெல்லி வருகை தந்துள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் பிரிவினர் வருகை தந்துள்ளனர். திமுக சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விசிக தங்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via