டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

by Staff / 26-02-2024 11:50:58am
டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவின் தாவணகரேயில் இன்று நடந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து தாவணகரே மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஆந்திராவின் மந்திராலயம் தாலுக்காவில் உள்ள சிங்கராஜனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 48ல் தாவணகரே அருகே ஹாவேரி மாவட்டத்தில் உள்ள படாகியில் இருந்து தம்முரிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இரவில் விபத்து ஏற்பட்டது.

 

Tags :

Share via