நைல் நதியில் படகு மூழ்கி 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிரேட்டர் கெய்ரோவின் ஒரு பகுதியான கிசாவில் உள்ள மான்ஷாட் எல் கான்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகு விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் எகிப்திய பவுண்டுகளும், காயமடைந்தவர்களுக்கு 20 ஆயிரம் பவுண்டுகளும் இழப்பீடாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Tags :