மூணாறு அருகே காட்டு யானை தாக்கி ஓட்டுநர் பலி

by Staff / 27-02-2024 12:13:39pm
மூணாறு அருகே காட்டு யானை தாக்கி ஓட்டுநர் பலி

கேரள மாநிலம் மூணாறு நகருக்கு அருகில் உள்ள கன்னிமலை தேயிலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் எஸ்டேட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த ஆட்டோவை வழிமறித்த யானை, தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னால் வந்த ஜீப்பில் இருந்தவர்கள் யானையை விரட்டியடித்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Tags :

Share via