வேலை கிடைக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை

by Staff / 27-02-2024 02:45:44pm
வேலை கிடைக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை

கோவை துடியலூர் கே.வடமதுரையைச் சேர்ந்தவர் சுரேந்திரன் மகள் சுவாதி(21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற பல கம்பெனிகள் பங்கேற்ற வளாக நேர்முகத்தேர்வில் சுவாதி கலந்து கொண்டார். இதில் அவர் தேர்வாகாததால் வேலை கிடைக்கவில்லை. இதனால் சுவாதி கடும் மன உளைச்சலில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.இதனைபார்த்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுவாதியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via