குழந்தைத்தனமாக காரணம் கூறும் மத்திய அரசு: மா. சுப்பிரமணியன்

by Staff / 03-03-2024 12:52:01pm
குழந்தைத்தனமாக காரணம் கூறும் மத்திய அரசு: மா. சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு குழந்தைத்தனமாக காரணங்களை கூறுகிறது. என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.  அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டினார்? மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால், எய்ம்ஸ் பணிகள் காலதாமதம் ஆனது எனக்கூறுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via