தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், இலங்கைக் கடற்படையினர் மார்ச் 10 அன்று, இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு, 22 மீனவர்களை கைது செய்துள்ளனர். இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம். எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.
Tags :