தமிழகத்தில் 11 கல்லூரிகள் மூடல்

by Staff / 23-03-2024 01:35:54pm
தமிழகத்தில் 11 கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு நடப்பாண்டில் அனுமதி அளிக்காமல் இருக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படாமல், 5 சதவீதத்திற்கும் கீழ் மாணவர்கள் சேர்க்கை இருந்த 11 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகளில் ஏற்கனவே படித்து வரும் மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கவும், தொழில்நுட்ப கல்வி இயக்கம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 429 பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 25ஆயிரம் இடங்கள் உருவாக்க கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via