பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

by Staff / 24-03-2024 05:03:19pm
பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணியின் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமா அவர்களின் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல்லில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.அறிமுக கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் திலகபாமா கூறுகையில், பாமக திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கிறது. திராவிட கட்சிகளின் அராஜகப் போக்கில் இருந்து நாம் விடுபட வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியாவை உலக அரங்கில் ஆளுமையுடன் நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்ற பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆகி மீண்டும் இந்தியாவை சரியான வழியில் வழி நடத்திட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் உள்ளது.

திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைகள் தொடங்கி சுங்கடி சேலைகள், பூக்கள், பணப்பயிரான காபி, நெல் விவசாயம், இன்று பழனியில் வெடிகுண்டு அச்சுறுத்தல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் குலைந்து உள்ளது. தலைமுறையை அளிக்கக்கூடிய போதைப்பொருள் தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதையெல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும்.இங்கு வேட்பாளர் திலகபாமா போட்டியிடவில்லை. பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் போட்டியிடுவதாக நினைத்து நாம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என பாமக வேட்பாளர் திலகபாமா கூறினார்.

 

Tags :

Share via

More stories