அதிமுக திமுக வாக்குவாதம்.. அமைச்சர் விளக்கம்

by Staff / 25-03-2024 04:34:19pm
அதிமுக திமுக வாக்குவாதம்.. அமைச்சர் விளக்கம்

 

வட சென்னை தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தாங்கள் தான் முதலில் வந்ததாகவும் தாங்களே முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் நாங்களே முதலில் டோக்கன் வாங்கினோம். அதனால் எங்கள் வேட்புமனுவைத்தான் முதலில் வாங்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். இந்நிலையில் முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான் என்றும், அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்கின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டினார். மேலும், முதலில் அலுவலகத்துக்குள் சென்றவர்கள் நாங்கள்தான், நாற்காலியில் அமர்த்தவர்களும் நாங்கள்தான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

 

Tags :

Share via