போக்சோ வழக்கில் முதியவர் கைது

by Staff / 28-03-2024 12:14:32pm
போக்சோ வழக்கில் முதியவர் கைது

விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, (73); இவர், கடந்த 9ஆம் தேதி, 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முனுசாமியை கைது செய்தனர்.

 

Tags :

Share via