கார் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

by Staff / 29-03-2024 12:47:44pm
கார் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலைப்பகுதியான ரம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் சென்ற போது கார் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via