லாலு பிரசாத் யாதவ் 12வது முறையாக போட்டியின்றி தேர்வு

by Staff / 29-09-2022 11:31:43am
லாலு பிரசாத் யாதவ் 12வது முறையாக போட்டியின்றி தேர்வு

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிறுவன தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 12-வது முறையாக கட்சித் தலைவராக புதன்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

லாலு டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், கட்சித் தலைவர் பதவிக்கு லாலு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், இதனால் கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கட்சி தேர்தல் அதிகாரியான உதய் நாராயண் சௌத்ரி அறிவித்தார்.

இருப்பினும், லாலு யாதவ் கட்சியின் தலைவராக பதவியேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 10-ம் தேதி டெல்லியில் உள்ள தல்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெறும் மாநாட்டில் வெளியிடப்படும்.

 

Tags :

Share via