அரசு போக்குவரத்துக்கழக அ.தி.மு.க.  தொழிற்சங்க பேரவை தேர்தல்  எடப்பாடி – ஓ.பி.எஸ். அறிவிப்பு

by Editor / 05-08-2021 04:23:13pm
அரசு போக்குவரத்துக்கழக அ.தி.மு.க.  தொழிற்சங்க பேரவை தேர்தல்  எடப்பாடி – ஓ.பி.எஸ். அறிவிப்பு


அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 8.8.2021 முதல் 17.9.2021 வரை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.


இதுகுறித்து அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, வருகின்ற 14.8.2021, 22.8.2021, 29.8.2021, 7.9.2021 மற்றும் 17.9.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


அதேபோல், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்து வதற்காக, தேர்தல் கண்காணிப்பா ளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளின் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, கழக அண்ணா தொழிற்சங்க த்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via