டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை

by Staff / 03-04-2024 12:06:24pm
டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை

கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் கொலை செய்யப்பட்டார். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த நபரிடம் டிடிஇ வினோத் விசாரணை நடத்தினார். ஆனால் அந்த நபர் குடிபோதையில் டிடிஇ வினோத்தை தாக்கியதோடு, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதில் எதிரே வந்த மற்றொரு ரயிலில் அடிபட்ட வினோத் கீழே விழுந்து இறந்தார். குற்றவாளியை பாலக்காட்டில் போலீசார் கைது செய்தனர். டிடிஇ வினோத் பல்வேறு மலையாளத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்து கவனம் பெற்றவர்.

 

Tags :

Share via