வாக்குப்பதிவு முடிந்த பின்னும் கட்டுப்பாடுகள் தொடரும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

by Staff / 08-04-2024 02:39:30pm
வாக்குப்பதிவு முடிந்த பின்னும் கட்டுப்பாடுகள் தொடரும்  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

மக்களவை தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரையில் ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் இன்றி கையில் ரொக்கமாக வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via