உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா - அண்ணாமலை

by Staff / 31-05-2023 01:31:41pm
உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா - அண்ணாமலை

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கைது செய்தால் தான் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்வோம் என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கூறிய புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via