ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

by Staff / 13-04-2024 11:17:00am
ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

மதுரை வண்டியூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், உத்தங்குடி பகுதியில் ஏடிஎம்-ல் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஓ அதிகாரிகள் இதுதொடர்பான விசாரணையை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories