PF கிடைக்காத விரக்தியில் முதியவர் தற்கொலை
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் 11 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வந்தவர் அய்யனார் (65). இவர் கடந்த சில மாதங்களாக வருங்கால வைப்பு நிதியை(PF) எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த தொகை வர இழுத்தடிக்கப்பட்டதால் விரக்தியடைந்த அய்யனார், பட்டாசு ஆலைக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அய்யனாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :