ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் சமீபத்தில் வியப்பூட்டும் வகையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஐந்து பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தாஹிரா பேகமுக்கு ஏற்கனவே வயிற்றில் ஐந்து சிசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் தாகுர்கஞ்ச் சமூக சுகாதார மையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்த டாக்டர்கள் மிகுந்த கவனத்துடன் பிரசவம் பார்த்த நிலையில், தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
Tags :