10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி

by Staff / 10-05-2024 01:16:25pm
10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி

மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும் போது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை ஒட்டி வந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via