அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

by Staff / 10-05-2024 03:15:31pm
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டவர். இந்த வழக்கு காரணமாக இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று நடந்த விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via