அதிமுக ஆட்சியில் ரூ.6000 கோடி நிலக்கரி ஊழல்

by Staff / 22-05-2024 02:57:28pm
அதிமுக ஆட்சியில் ரூ.6000 கோடி நிலக்கரி ஊழல்

தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு 2014ல் தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது தற்போது அம்பலமாகியுள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளது. இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ரூ.2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ரூ.7,650 என நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளது.

 

Tags :

Share via