ஜெயக்குமார் மரணம்: குடும்பத்தாரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

by Staff / 27-05-2024 04:57:53pm
ஜெயக்குமார் மரணம்: குடும்பத்தாரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டி.என்.ஏ பரிசோதனைக்காக ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரி சேகரிப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo