ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மீண்டும் மனு

by Staff / 30-05-2024 02:57:04pm
ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மீண்டும் மனு

தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மதியம் 2 மணிக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

 

Tags :

Share via

More stories