பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில்  போலி மின்னஞ்சல்! - 7 பிரிவுகளில் வழக்கு

by Editor / 09-08-2021 05:11:17pm
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில்  போலி மின்னஞ்சல்! - 7 பிரிவுகளில் வழக்கு


 

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பெயரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து அவதூறு பரப்புவதாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார். போலி மின்னஞ்சலை தொடங்கி அதன் மூலம், மூஸ்லீம்களை அவதூறாக பேசியுள்ளதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில், தமிழக நிதி அமைச்சரின்பேரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து அதன்மூலம், முஸ்லீம்களை அவதூறாக பேசியுள்ளதாக தெரியவந்த வந்த தகவலின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.


குறித்து போலீஸார் கூறுகையில், ``நிதியமைச்சர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 153 (ஏ) மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், 295 (ஏ) ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், 465 பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், 467 - மதிப்புமிக்க பாதுகாப்பு, உயில் போன்றவற்றை போலி ஆவணங்கள் தயாரித்தல், 500 - அவதூறு பரப்புதல், 34 - உட்கருத்துடன் செய்யப்படும் செயல்கள், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

எந்த ஐபி அட்ரஸிலிருந்து மெயில் அனுப்பப்பட்டது என்ற விவரத்தை சைபர் க்ரைம் போலீஸார் சேகரித்துவருகின்றனர். குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
 

 

Tags :

Share via