ஒட்டு மொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது"
தமிழரை இழிவுபடுத்தும் வகையில் ஒடிசாவில் தேர்தல் விளம்பரம் வெளியிட்ட பாஜகவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதனை இனம், மொழி, மதத்தால் பிரித்து பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் மறத்தமிழன் பாண்டியன் அறத்தின் வழிநின்று வென்று காட்டுவார். தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டு மொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது" என கூறியுள்ளார்.
Tags :