மருத்துவர்கள் இல்லாமல் பணியாளரைக்கொண்டு செயல்பட்ட ஸ்கேன் மையம்.

by Editor / 05-06-2024 11:53:55pm
மருத்துவர்கள் இல்லாமல் பணியாளரைக்கொண்டு செயல்பட்ட ஸ்கேன் மையம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது தனியார் ஸ்கேன் மையம். இதில் மருத்துவர்கள் இல்லாமல் இந்த ஸ்கேன் வையத்தில் பணியாளர் மற்றும் உரிமையாளர் ஸ்கேன் எடுப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.இதன்  தொடர்ச்சியாக செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் இதுகுறித்து தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவிடம் புகார் தெரிவித்தார், இதன் அடிப்படையில் அவரது தலைமையில் மருத்துவ துறை அதிகாரிகள், மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து அந்த ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு பணியாற்றிய பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய மருத்துவர்கள் இல்லாமல் ஸ்கேன் மையம் செயல்பட்டதைத்  தொடர்ந்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா அந்த ஸ்கேன் மையத்தின் உடைய உரிமம் ரத்து செய்தார். மேலும் ஸ்கேன் மையத்தை காவல்துறையினர் பூட்டி சாவியை கொண்டு சென்றனர் அதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : மருத்துவர்கள் இல்லாமல் பணியாளரைக்கொண்டு செயல்பட்ட ஸ்கேன் மையம்.

Share via