தனியாருக்கு சொந்தமான காற்றாலை தீ பிடித்து எரிகிறது

by Editor / 06-06-2024 09:29:17am
தனியாருக்கு சொந்தமான காற்றாலை தீ பிடித்து எரிகிறது

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாம்பவர் வடகரை பொய்கை சாலையில் கருங்குளம் என்கின்ற பகுதி உள்ளது இந்த பகுதியில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது இதன் தொடர்ச்சியாக இது குறித்து சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்ப பணிகள் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் விரைந்து சென்று காற்றாலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இருப்பினும் தொடர்ந்து காற்றாலை தீப்பிடித்து எரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது

 

Tags : தனியாருக்கு சொந்தமான காற்றாலை தீ பிடித்து எரிகிறது

Share via