ஈரானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்குகிறது
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 40,808 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே நாளில் 40,808 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்குகிறது. மேலும், ஒரே நாளில் 588 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 33.65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 5.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
Tags :