அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது

by Staff / 04-07-2024 04:46:05pm
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சதீஷை காவல்துறை கைது செய்தனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகி சதீஷ் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் சதீஷ் ஈடுபட்டு வந்ததாக சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சண்முகம் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது 2 டூவீலர்களில் சிலர் கும்பலாக எதிரில் வந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

 

Tags :

Share via