தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்-மாயாவதி 

by Editor / 07-07-2024 11:47:43am
தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்-மாயாவதி 

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு உ.பி. முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது:

கட்சி அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர், தேர்வு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே.ஆம்ஸ்ட்ராங் படுகொலையை, தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது,
தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்,ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும்,படுகொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை,படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது,
படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது,சட்டத்தை கையில் எடுத்து தொண்டர்கள் செயல்பட கூடாது, அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள்.ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது.ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்,
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்.தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை செய்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்.என்றார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி

 

Tags : தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்-மாயாவதி 

Share via