அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர்..

by Staff / 10-07-2024 05:26:37pm
அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர்..

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் கீழத்தெருவில் குடிநீர் வழங்கும் குழாயில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த தெருவை சேர்ந்த சிறுவர்களுக்கு அடுத்தடுத்து குடிநீர் மூலம் பரவும் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். அதிகாரிகளில் அலட்சியமே இதற்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

 

Tags :

Share via