சவுதி விமானம் தரையிறங்கும் போது விபத்து
பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் சவுதி விமானம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு. ரியாத் நகரில் இருந்து 297 பயணிகளுடன் பெஷாவர் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியரில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தின் அவசர வழி கதவு மூலம் பயணிகள் குதித்து உயிர் தப்பியுள்ளனர். மேலும், காயமடைந்த 10 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Tags :