இருசக்கர வாகனங்கள் மோதி நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

by Staff / 23-09-2022 02:08:38pm
இருசக்கர வாகனங்கள் மோதி நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே அரசநத்தம் ஊராட்சி, கந்தசாமிபுதூர், தெற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் ( 30 ). இவரது மனைவி பானுபிரியா (22). இவர்களது மகன் ஜெயசர்மா, 4. இவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் 'டிவிஎஸ் - எக்ஸ். எல். , சூப்பர்' மொபட்டில், 3 பேரும், தம்மம்பட்டியில் உள்ள முஸ்லிம் மசூதியில் பாடம் போட சென்று கொண்டிருந்தனர். கீரிப்பட்டி, கொரணிகரடு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, செந்தாரப்பட்டியை சேர்ந்த, சிலம்பரசன், 35, ஓட்டி வந்த பஜாஜ் - சி. டி. , 100' பைக், மொபட் மீது மோதியது. அதில், முருகன், பானுபிரியா, ஜெயசர்மா படுகாயமடைந்த நிலையில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு ஜெயசர்மா உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via