பட்டா மாறுதல் செய்ய ஓய்வு பெற்ற எஸ் .ஐ .யிடம் 3 லட்சம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

by Admin / 11-03-2022 02:02:08pm
பட்டா மாறுதல் செய்ய ஓய்வு பெற்ற எஸ் .ஐ .யிடம் 3 லட்சம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் 3 லட்ச ரூபாய் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.

மணி என்பவர் தனக்கு சொந்தமான பாகப் பிரிவினை சொத்திற்கு பட்டா மாறுதல் செய்து தரக்கோரி புல்லுர்   விஏஓ  சதீஸை   அணுகியபோது அவர் மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஓய்வுபெற்றஎஸ் .ஐ .யானமணி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சதீஸியிடம் கொடுத்தபோது மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்

 

Tags :

Share via