அண்டை மாநிலங்களுக்கு கனிமம் கடத்தும் வாகனங்களை பறிமுதல்: துரைமுருகன்.
தமிழகத்தில் இருந்து விதிகளுக்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் வைத்துள்ள நிலுவை தொகையினை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் விதி மீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Tags : அண்டை மாநிலங்களுக்கு கனிமம் கடத்தும் வாகனங்களை பறிமுதல்: துரைமுருகன்.