நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் .இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.

by Editor / 21-07-2024 10:04:25am
நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் .இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.

தூத்துக்குடி மாடம் கோவில்பட்டியில் உள்ள  தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை  கலந்து கொண்டார். கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கிய பின்னர் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில் நான் நீட்டுக்கு போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் நீட் படித்து மருத்துவராகும் மாணவர்கள் என்னுடைய சர்ஜிகல் ரோபோட் (தொலைதூர அறுவை சிகிச்சை) பற்றி படிக்கும் அவசியம் இருக்கும் என்றார்.விவசாயிகளின் கையில் ரோபோட்கள் மற்றும் ஹெலிகேம் கிடைத்தால் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது பற்றி விளக்கமும் கொடுத்தார்.இதனை தொடர்ந்து அவர் பேசுகையில் நிலாவில் ஆம்ஸ்ட்ராங் முதலில் இறங்கி இருக்கலாம் ஆனால் நிலவில் நீர் இருக்கிறது என்பதை சொன்னது நாம் தான். நிலவின் தென் புருவத்தில் மெதுவாக இறங்க முடியும் என்று நிரூபித்தவர்கள் நாம். முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தினை அடைந்தவர்கள் நாம். நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான திறன் நமக்கு இருக்கிறது. என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை விட எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்படும் போது, அதற்கு கைகளை தூக்கி மரியாதை செலுத்தும் போது  நம்முடைய தேசியக்கொடி மேலே உயர்த்த நாம் செயல்பட வேண்டும் என்பதை குழந்தைகள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும், நிலா மற்றும் செவ்வாயில் இந்திய தேசிய கொடியை நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பினை நான் உருவாக்க வேண்டும் என்று குழந்தைகள் நினைக்க வேண்டும் என்றார்‌.


 

 

Tags : நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் .இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.

Share via