மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவர் கைது
சேலம் உடையபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (23) என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவரது மனைவி தாயார் வீட்டில் இருக்கிறார். அப்பெண்ணின் செல்போனில் இருந்த ஆபாச படங்களை பார்த்த உறவினர்கள் பெண்ணிடம் கேட்டுள்ளனர். அதற்கு, தனது கணவர் தன்னை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்த நிலையில் தமிழ்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :