நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது

சென்னையில் நோயாளி ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட78 வயது முதியவரை அவரது மருமகன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலை ஆம்புலன்ஸ் கடந்தபோது என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக ஆம்புலன்ஸ் நிறுத்தி உள்ளே இருந்தவர்களை கீழே இறக்கி விட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரியத் தொடங்கியது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்துவதற்குள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :