குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியிடம் விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனு
தமிழ் சினிமாவில் எடிட்டராக பல படங்களுக்கு பணி புரிந்த மோகனின் இளைய மகன் ரவி. மோகனுடைய மூத்த மகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி; முதல் படத்திலேயே பிரமாண்டமான வெற்றியை ருசித்தார். அழகு மட்டுமின்றி திறமையும் அவரிடம் இருந்ததால் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு பிறகு தொடர்ந்து தனது அண்ணன் இயக்கிய ரீமேக் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி கல்லூரி படிக்கும்போது ஆர்த்தி என்பவரை காதலித்தார். பிறகு வீட்டு சம்மதத்துடன் அவரையே கடந்த 2009ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்க அவர்களுக்கு ஆரவ், ஆயான் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந் நிலையில்மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவியின் மனு அக்.10ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார். மனைவியிடம் இருந்து பிரிவதாக ஜெயம் ரவி நேற்று சமூகவலைதளங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.
Tags : குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியிடம் விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனு