சீனாவை புரட்டி போட்ட சூறாவளி; 4.20 லட்சம் பேர் வெளியேற்றம்

by Editor / 10-09-2024 03:57:53pm
சீனாவை புரட்டி போட்ட சூறாவளி; 4.20 லட்சம் பேர் வெளியேற்றம்

அண்டை நாடான சீனாவில் ஹைனான் தீவுப்பகுதியில், சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதற்கு, 'யாகி' என பெயரிடப்பட்டிருந்தது. ஹைனான் தீவில் வென்சாங் நகரை நோக்கி, மணிக்கு 245 கி.மீ., வேகத்தில் இந்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக, அங்குள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் இப்புயல் புரட்டிப் போட்டது.

 

Tags : சீனாவை புரட்டி போட்ட சூறாவளி; 4.20 லட்சம் பேர் வெளியேற்றம்

Share via